Pages

Wednesday, June 25, 2014

என் அப்பனே என் ஐயனே




என் அப்பனே என் ஐயனே

  விளம்பரம் சீக்கிரம் முடிந்து விடும். ஸ்கிப் செய்யவும்.

  வேலவன் வருவான்.

   காத்திருங்கள்.



Sunday, June 22, 2014

எல்லாம் முருகன் எனக்கெல்லாம் முருகன்

*********************************************************************************************************** **************************************************************************************************************** 

எல்லாம் முருகன் எனக்கெல்லாம் முருகன்.
ஆறுபடை வீடு எங்கும் அழகன்  ஆறுமுகன்.
வேலன் குமரன்  ஞானஸ்கந்தன் செந்தூரன்
வேண்டி வரும் பக்தர் வினை யாவும் தீர்ப்பவன்.

பாலன் அவன் ஆண்டியாகி பழனி சென்றவன்
ஞாலத்திற்கு வேதமத்தின் பொருள் சொன்னவன் -
உண்மைப்பொருள் சொன்னவன்.

பாடுவோம்  பாடுவோம் திருப்புகழை.
ஓதுவோம் ஓதுவோம் குகன்  நாமத்தை.

கந்தனையே சிந்தனையில் என்றும் கொள்ளுவோம்.
வந்தனை செய்வோம். வேல் வேல் எனச்சொல்வோம்.


ஆறெழுத்து மந்திரமாம் ஆறுமுகன் பெயர்.
தீரவே நம் வினைகளெல்லாம் தினமும் சொல்லுவோம்
சரவணபவ எனச் சொல்லும் போதிலே
அரவணைப்பான் அவன் அருள் பொழிவான்.

எல்லாம் முருகன் எனக்கெல்லாம் முருகன்.  நான்
எங்கு என்ன செய்தாலும்  நாவில் ஆறுமுகன், என்
நாவில் முருகன்.


Sunday, June 15, 2014

நீ என் குழந்தையடா, முருகா




நீ என் குழந்தையடா – 
உன்னை மடியேந்துதல் என் உரிமையடா… 
முருகா… (நீ என்) 

 தீச்சுடரில் பிறந்தாய் 
தீங்கனியாய் வளர்ந்தாய் 
மாங்கனியால் பழனி 
மாமலையில் அமர்ந்தாய்!
 (நீ என்) 

 உன் முகம் காண்கையிலே 
உள்ளத்தில் ஒரு நேசம்
 திருமுகம் காண்கையிலே 
தோன்றுது தனிப் பாசம்! 

 திருமகள் மருமகனே
 திருப்புகழ் நாயகனே 
அறுமுகத் திருமகனே 
அருகினில் வா குகனே! (நீ என்) 

 கூவி அழைக்கின்றேன்
 குமரா திரு முருகா! 

தாவி எனை அணைக்க 
தக்ஷணமே வருவாய்! 


 தத்தித் தவழ்ந்து வரும் 
தங்கத் திருப் பாதம் எட்டி
 எனை உதைத்தால் 
கிட்டிடுமே மோக்ஷம்! 
(நீ என்) 

 --கவிநயா படத்துக்கு நன்றி: http://knowledgefruit.blogspot.com/2010/12/story-of-subrahmanya-is-found-in.html Posted by கவிநயா at 6/14/2014 09:58:00 AM