Pages

Saturday, November 30, 2013

அவனி தனிலே பிறந்து....

 

அவனி தனிலே பிறந்து, மதலை எனவே தவழ்ந்து 
அழகு பெறவே நடந்து ...... இளையோனாய்
 
அரு மழலையே மிகுந்து, குதலை மொழியே புகன்று
 
அதி விதமதாய் வளர்ந்து ...... பதினாறாய்



சிவகலைகள் ஆகமங்கள், மிகவு மறை ஓதும் அன்பர் 
திருவடிகளே நினைந்து ...... துதியாமல்
 
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி, வெகு கவலையால் உழன்று
 
திரியும் அடியேனை உன்றன் ...... அடிசேராய்



மவுன உபதேச சம்பு, மதி அறுகு வேணி தும்பை 
மணி முடியின் மீதணிந்த ...... மகதேவர்
 
மன மகிழவே அணைந்து, ஒருபுறம் அதாக வந்த

மலைமகள் குமார துங்க ...... வடிவேலா





பவனி வரவே உகந்து, மயிலின் மிசையே திகழ்ந்து 
படி அதிரவே நடந்த ...... கழல்வீரா

பரமபதம் ஆய செந்தில், முருகன் எனவே உகந்து 
பழநிமலை மேல் அமர்ந்த ...... பெருமாளே!


படங்கள் எல்லாம் முருகனருளால், முருகனருள் வலையில் இருந்து இரவலாக வாங்கி வந்தவை.

முருகன் அருளால் கண்ணபிரான் அனுமதி தருவாராக.

Saturday, November 9, 2013

இப்படியும் பாடலாமோ ?

திருப்பரங்குன்றத்திலே நீ சிரித்தால் ,,,,

இப்படியும் பாடலாமோ ?


Friday, November 8, 2013

பவனி வந்தான் தேரிலே...

பழனி எனும் ஊரிலே பழனி என்னும் பெயரிலே

பவனி வந்தான் தேரிலே...


Monday, November 4, 2013

கந்தா.. உனைத்தானே..

வெற்றி வேலாயுத பெருமானே 
வெற்றி கிட்டியதே உன்றன் அருளாலே 
..
கந்தா.. உனைத்தானே..
அற்புதமான கந்தன் கவிதை ஒன்று அம்பாள் அடியாள் அவர்கள் வலையிலே 
முருகன் அருளைப் பெற்றிருந்தால் மட்டுமே இது போன்ற கவிதை எழுத மனதில் தோன்றும். 

முருகா.  முருகா.


Friday, September 6, 2013





முருகனருள் என்னும் வலைத் தளத்தில் இந்த முருகன் பாடலைக் கண்டு வியந்தேன்.

பாடலாசிரியருக்கும் பாடியவருக்கும் பாட்டு இசை அமைத்தவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.


Friday, August 30, 2013

Sunday, August 25, 2013

உன் அருள் ஒன்றே போதும். வேலவா.


திகழ் எனும் பெயருடன் விளங்கும் திரு அகரம் அமுதா அவர்களின் வெண்பா முருகப்பெருமான் அருளை வேண்டி பாடப்பெறுகிறது.

உன்னை அன்றி வேறன்னே வேண்டும் எனக்கு என மனமுருகி பாடுவதை பார்த்தேன்.

நானும் பாடுகிறேன்.

உன் அருள் ஒன்றே போதும். வேலவா.

Wednesday, July 31, 2013

மலை மேலே இருக்காண்டி அந்தப் பழனியாண்டி

  மலையாண்டி.
மலையாண்டி அவன் தாண்டி
சிவனாண்டி மகனாண்டி
வேலேந்தித் திரிவாண்டி
நமைக் காக்க வருவாண்டி

மலை மேலே இருக்காண்டி
அந்தப் பழனியாண்டி
நற்பதம் வேண்டி
அவன் பாதம் பணிவோண்டி

மனதில் கவலையேண்டி
நினைத்தாலே போதுண்டி
இரக்கந்தான் கொள்வாண்டி
இறங்கி யவன் வருவாண்டி

நடராஜன் கல்பட்டு

  கல்பாட்டு நடராஜன் அவர்கள் எழுதியது.

Friday, July 26, 2013

அழகிய மயில் ஏறி வருவான் .

அழகிய மயில் ஏறி வருவான் .
என்னும் அருமையான முருகன் பாடலை கவிஞர் பாரதி தாசன் இயற்றி அவரது வலையில் இட்டு இருக்கிரார்கள்.

அதை நான் படிக்க படிக்க பரவசமானேன்.
பாடலை பிருந்தாவன் சாரங்க எனும் ராகத்தில் என்னையும் அறியாது பாடலானேன்.

என்ன அழகான கவித்வம் கொண்ட பாடல் இது.
எல்லாம் அந்த முருகன் அருளே.

பாடலின் முழு வடிவத்தையும் காண அவரது வலைக்குச் செல்ல இங்கே கிளிக்குங்கள்.


You can listen to the song also here

இங்கே தங்களது பாடலின் இசையைக் கேட்டு முருகன் அருள் பெறுங்கள்.

Sunday, May 26, 2013

சொல்லாத நாள் இல்லை முருகா

சொல்லாத நாள் இல்லை முருகா

என எழுதுகிறார் எனது நண்பர் கண்ணபிரான் அவர்கள்.

அப்பாடலின் முழு வடிவத்தை அவரது வலையில் காணுங்கள்
  இங்கே   அவரது பாடல் கேட்கலாம்.

அவர் இப்பாட்டை காவடி சிந்து மெட்டில் பாடலாம் என்று குறித்து இருந்தார்
நானும் அதே ராகத்தில் பாடி இருக்கிறேன்



Wednesday, April 24, 2013

செந்தில் நகர் மேவும் தேவா



THIS VIDEO WAS SEEN BY ME AT www.kannansongs.blogspot.com

 Courtesy: MY WEB FRIEND MR.KANNABIRAN.

COMPOSER OF THIS SONG : LALGUDI JAYARAMAN

 செந்தில் நகர் மேவும் தேவா - சிவபாலா,
 நீ சிந்தை இரங்கி எனை ஆளவா - வேலவா!
 எந்த வேளையும் உன்னை அன்றி - வேறோர் எண்ணம் உண்டோ? எந்தன் உள்ளமும் நீ அறியாயோ? - ஏன் இந்த மாயம்?
 (சிட்டை ஸ்வரம்)
இது தகுமோ? தருமம் தானோ?
 வாராதிருக்க மருமம் ஏனோ?
 கனிந்து வந்திடா விடில், யான் என் செய்குவேன்?
ஏதும் புகலிடம் அறியேன்;
 ஒரு கணமேனும் மறந்தறியேன்;
 இவ்விளம் பேதை.. மகிழ -
 முழு மதி - முகம் அதில் -
குறுநகை யொடு கருணை - பொழிய வா -
அருளே தருக வா - திரு மால் மருகா!
 (முடிப்பு)
வா வா, ஆடும் மயில் மீது வா!
 அழகா முருகா நீ..
. உன் வடிவழகைக் காண, என் முன் நீ (வா வா,
 ஆடும் மயில் மீது வா!)
 என் முறை கேட்டிலையோ?
 வர மனமிலையோ?
செவி புகவிலையோ?
 இனியாகிலும் (வா வா,
 ஆடும் மயில் மீது வா!)


உருகி உருகி, உளம், ஊண் உறக்கம் இன்றிப்
பெருகிப் பெருகி, விழி உடலது சோர்ந்திட
ஆவலோடு உனை நாடி எங்கும் தேடினேன்
மனம் வாடினேன் - துயர் ஓடிடவே
(வா வா, ஆடும் மயில் மீது வா!)

அன்றே ஒரு நாளும் உனைக் கை விடேன் - என அன்புடனே 
ஆதரவைச் சொன்னதும், மகிழ்ந்துளம் கலந்ததும் - சிறிதும் நினைவிலையோ?

பரம தயையும் - பரிவும் உறவும் - மறையுமோ இன்று?
இனித் தாளேன்!
தணிகை வளரும் அரு மணியே, என் கண் மணியே,
என் உயிரின் துணையே!
(வா வா, ஆடும் மயில் மீது வா!)

ராகம்: நீலாம்பரி
தாளம்: ஆதி
எழுதி/இசை: லால்குடி ஜெயராமன்

Monday, April 1, 2013

Avinan kudi

SUBRAMANIA PA MALAI 2




துர்க்கை சித்தர் அருளிய சுப்பிரமணிய மாலை.

 இது இரண்டாம் பாடல்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பாசுரம்.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ராகம்.

 இன்று ராகம் மோஹனம். இந்த song ஐ நான் மேடம் கவினயா அவர்களுக்கு DEDICATE செய்கிறேன்.

Friday, March 22, 2013

கந்தா கடம்பா கதிர்வேலா


KANDHA KADAMBA KATHIRVELA




     கந்தா கடம்பா கதிர்வேலா ...  என்
     கண் முன்னே இன்று வா ... வா...

     விண்ணில் வலம் வந்த கந்தா முருகா .   என்
     கண்முன்னே இன்று வா.  வா வா..


     ஆறு படை வீடு கண்டாய் முருகா முருகா.   ..  எனக்கு
     ஆறுதல் சொல்ல வா...

     குன்றிலே சென்றமர்ந்த குமரா..வேலா.   என் வினைகளை
     வென்றிட வழி ஒன்று தா...   தா.

     கந்தா கடம்பா கதிர்வேலா...


    மலேஷிய பயணத்தில் தைப்பூச தினத்தன்று திருமதி கவி நயா அவர்கள் பினாங்கு முருகன் கோவில் வெள்ளி ரத நிழற்படத்தைப்
    பார்த்த பரவசத்தில் எழுதிய பாடலிது.

    இந்த ப்பாடலுக்கான பெருமை எல்லாம் முருகனையும் கவி நயா அவர்களையுமே சாரும்.
  
  

Sunday, March 17, 2013

பிரணவத்தின் பொருளை


கந்தன் என் கைதி !

பிரணவத்தின் பொருளை விளக்காத அயனைச்
சிறையிலிட்ட சண்முகா !
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

அரனுக்கு ஏரகத்தில் பிரணவம் விளக்கப் பரம
குருக்கோலம் பூண்ட குகா!
தந்தையைப் பூசிக்கும் மகனாய்ச் செந்தூரிலுனைக்
கண்டதும் ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

கிழவனாய் வள்ளியுடன் லீலைகள் புரிந்த
அழகனே!ஆறுமுகா!
குழந்தைக்குறும்பனாய் அவ்வைக்கு நீகாட்டும்
கோலமோ ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

கோவணாண்டியாய் ஆவினன்குடிதனில்
மேவும் பாலமுருகா!
சுரமகள் ,குறமகள் பதியாய் குன்றத்திலுந்தன்
தரிசனம் ஆஹா!ஆஹா!
கானத்தமிழ்க் கயிற்றால் கட்டி உனை என்னுள்
கைது செய்தேன் குமரா!

Mrs.Lalitha Mittal is the author of the song above.
 

Friday, March 15, 2013

தண்டம் ஒரு கையிலே நீறு அவன் மெய்யிலே




தண்டம் ஒரு கையிலே நீறு அவன் மெய்யிலே
 கந்தா வென்று சொல்லி விட்டால் வந்திடுவான் நொடியிலே!

 கந்தனுக்கு அரோஹரா! 
கடம்பனுக்கு அரோஹரா! 
வேலனுக்கு அரோஹரா! 
பாலனுக்கு அரோஹரா! 


அன்னை தந்தை துறந்து வந்தான் கோவணாண்டியாய்
 நமக்கு அருளிடவே இறங்கி வந்தான் பழனியாண்டியாய்! 
மயிலேறி வந்தானே மலையேறி நின்றானே 
செல்லக் கோபம் காட்டி நமது உள்ளங்களை வென்றானே! 

கந்தனுக்கு அரோஹரா! 
 கடம்பனுக்கு அரோஹரா! 
 வேலனுக்கு அரோஹரா! 
பாலனுக்கு அரோஹரா! 

ஆறுமுகம் கொண்டவன்நம் அழகு வேலவன் 
தன்னைக் கூறுமடி யார்கள் வினை தீர்க்க வந்தவன்! 
 வேலவனை வணங்கினால் வேதனைகள் தீருமே 
வேலை வணங்கும் வேலை மட்டும் செய்து வந்தால் போதுமே! 

கந்தனுக்கு அரோஹரா! 
கடம்பனுக்கு அரோஹரா! 
 வேலனுக்கு அரோஹரா! 
பாலனுக்கு அரோஹரா! 

 ************************* கவிநயா 8:00 PM (12 hours ago) to me