Pages

Sunday, November 20, 2011

Wednesday, November 16, 2011

வேல் மகிமை




வேல் மகிமை
வேல் மகிமை

மந்திரமாவது வேலே,மனச்

சாந்தியளிப்பதும் வேலே!

சுந்தரமாவது வேலே,சுக

வாழ்வு கொடுப்பதும் வேலே!

தந்திரமாவது வேலே,தன

பாக்கியம் தருவதும் வேலே!

செந்தூரிலே கோயில்கொண்ட கந்தன்

ஏந்திநிற்கும்சக்திவேலே!


ஆதரவாவது வேலே,அல்லல்

அகற்றியருள்வதும் வேலே!

சோதனையாவையுந்தாண்டி நம்மைச்

சாதிக்கச்செய்வதும் வேலே!

பேதங்கள் யாவையும்போக்கி நெஞ்சில்

நேயம் நிறைப்பதும் வேலே!

வேதங்கள் ஓதிடும் நாதன் விழி

ஜோதி விசாகனின் வேலே!


புத்தி திருத்திடும் வேலே,பொய்மை

போக்கும் புனிதனின் வேலே!

சக்தி பெருக்கிடும் வேலே,சித்த

சுத்தமளித்திடும் வேலே!

பக்தியைத்தூண்டி மனத்தை மிகப்

பரவசமாக்கிடும் வேலே!

பித்தன் நெற்றிவிழிப்பொறியாய் உதித்த

முத்துக்குமரன் கைவேலே!


இட்டமாய் நாடிவந்தோரின் கட்டம்

யாவும் களைந்திடும் வேலே!

சட்டித்திதிக்கான தெய்வம் கந்தன்

பொற்கரம் தாங்கிடும் வேலே!

துட்டரைவென்று துறத்தித் தூயோர்

துயரந்துடைத்திடும் வேலே!

பட்டரின் சொல்லை மெய்ப்பித்த

அபிராமியளித்த அருள் வேலே !

திருமதி லலிதா மிட்டல் அவர்கள் கந்த சஷ்டி திருவிழா வை முன்னிட்டு வேலின் பெருமைதனை பாடும் பாடல் இது.

வேலைப் பாடுவதைத் தவிர இந்த வேலையில்லாத கிழவனுக்கு வேறன்ன வேலை ?

வேலைப் பற்றி பாடுடா என்றான் வேலன்.
இதுவே என் வேலை தானே !!

Sunday, November 13, 2011

Saravanabhava

Saravanabhava

saravanabhava shanmugha
thiruvarul puriya vaa...

kundru thorum aazhum thirukumarane
kuraikal theertharulum.

Ranjani Gayathri Sing

Wednesday, November 9, 2011

Pazhani Nindra

Pazhani Nindra

Please click here to listen to a great song of PERIASAMY DHOORAN.
ON LORD MURUGAN

SINGER M.L.VASANTHA KUMARI.

Wednesday, November 2, 2011

THIRUPUGAZH



"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"


இந்தத் திருப்புகழ் பலரும் அறிந்த ஒரு புகழ்!
இசைநிகழ்ச்சிகளில் அடிக்கடி பாடப்படும் பாடல்.
மதுரை சோமு மிக அருமையாகப் பாடுவார் இதை!
இன்றையப் பதிவில் இந்த எளிய, பொருள் நிறைந்த பாடலின் புகழ் பார்க்கலாம்! முருகனருள் முன்னிற்கும்!

****** பாடல் ******

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்

மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

****** பொருள் ******
[பின்பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பார்க்கலாம்!!]

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
[அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி]

'அகரமும் ஆகி'

எழுத்துகளின் தொடக்கம் அகரம்
உயிர்களின் தொடக்கம் இறைவன்

பிறவெழுத்துகளின் இயக்கமும் இதனால்
உயிரும் உலகும் இறையின்றி இயங்கா

அனைத்தெழுத்திலும் உன்னி நின்றிடும் அகரம்
அனைத்துயிரிலும் மறைந்திருப்பவன் இறைவன்

அகரம் சொல்லிட அதிகச் சிரமமில்லை
இறைவன் இயக்கமும் தானாய் நிகழும்

அ,உ,ம, எனும் மூவெழுத்து இதனுள்
முத்தொழிலும் இறைவன் கையில்

அருளெழுத்தாம் 'வ'கரமும் அகரத்துள்
அருளைத் தருபவன் எம்முடை இறைவன்

தொலைவையும் சுட்டும் 'அ'வெனும் எழுத்து
எட்டிநிற்பினும் அருள்வான் இறைவன்

இத்துணை பெருமை கூடிய அகரமும் ஆகி,

'அதிபனும் ஆகி'

'எந்தக் கடவுளும் என் தோள் போழ்
கந்தக் கடவுளை மிஞ்சாதே'எனும்
பாம்பன் சுவாமியின் வாக்கிற்கொப்ப
தனிபெருந் தலைவனாய்த் திகழ்பவனாகி,

'அதிகமும் ஆகி'

தெய்வங்கள் பலவுண்டு இத்திருநாட்டினிலே
அனைத்துக்கும் அதிகமாய் நிற்பவன் முருகன்
'சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை
சுப்ரமண்யர்க்கு மிஞ்சிய தெய்வமுமில்லை' எனும்
பழமொழிக்கேற்ப அதிகமானவானுமாகி,

'அகம் ஆகி'

முத்தி பெறும் அனைவருமே அகத்துள் செல்வர்
அகத்தில் உறைபவன் அழகிய முருகன்
வீடு பேற்றினை நல்கிடும் நல்லருட் தெய்வமுமாகி,

'அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்'

படைப்பினைச் செய்திடும் பிரமனுமாகி
காத்தலை நிகழ்த்திடும் மாலுமாகி
அழித்திடச் செய்யும் உருத்திரனுமாகி
அவர்க்கும் மேலாய் அற்புதம் காட்டும்
அழகிய முருகனுமாகி,

'இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே'
[இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே]

தொலைபொருள் காட்டும் அகரமும் ஆனவன்
அருகினில் இருக்கும் இகரமும் ஆகி
அண்டிடும் அடியர்க்கு நல்லருள் புரிவான்

காற்றாகிக் கொடியாகி கானகமுமாகி
ஊற்றாகி உயிராகி உள்ளவை யாவுமாய் ஆகி
தோற்றுவிக்கும் அத்தனையும் தானேயாகி
ஆற்றல்நிறைப் பரம்பொருளாய் யாவுமாகினான்

கனியிலும் இனியன் கரும்பினும் இனியன்
பனிமலர்குழல் பாவையரினும் இனியன்
தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன்
உயிரினும் இனியன் உணர்வினும் இனியன்
இனிக்கும் இனிமையாய் வருபவன் முருகன்


'இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்'
[இருநிலம் மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்]

பூவுலகில் வாழ்கின்ற அனைத்துயிரும் நலம்வாழ
எனதுமுன்னே நீ விரைந்தோடி வரவேணும்


'மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே'
[மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே]

அசுவமேத யாகம்பல செய்ததனால்
யாகத்தின் அதிபதியெனப் பெயர் பெற்று
வலன் எனும் அரக்கனை அழித்தமையால்
வலாரியெனப் புகழ்பெற்ற இந்திரனும்
தம்மகளாம் தெய்வநாயகி மணாளனின்
பேரழகைக் கண்டு மனதிலங்கு வியந்து
மகிழ்வுடனே போற்றும் வடிவழகு பொருந்தியவனே

'வனமுறை வேடனருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே'

வனத்தில் வாழ்ந்தான் வேடனொருவன்
தனக்குள் ஆசையை அவனும் வளர்த்தான்
மனமயில் முருகனின் பூஜனை செய்திடும்
நினைவினில் அவனும் கோயிலை அடைந்தான்

கையினில் கனிகளும் கொம்புத்தேனும்
கொய்திட்ட புதுமலர்க் கொத்தும் கொண்டு
பையவே நடந்தான் கதிர்காமக் குமரனின்
மெய்வழிச் சாலையின் கோவிலை நோக்கி

செய்திட்ட பூஜையில் முருகன் மகிழ்ந்தான்
வந்திட்ட வேடனின் பூஜனை ஏற்றான்
மந்திரமில்லப் பூஜையிலும் மகிழ்வான்
மனமதிலொன்றி மகிழ்வுடன் செய்தால்

'செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே'

பொருந்திடும் போரில் வருந்திடும் உயிர்கள்
எழுந்திடும் விழுந்திடும் அவுணரின் உடல்கள்
வேலனின் மயிலின் போரதில் மாயும்
செககணசேகு தகுதிமிதோமி எனவெழும்
மயிலின் மீதினில் அமர்ந்து அடிடும் முருகோனே


'திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே'

செல்வம் மலிந்து கிடக்கும்
பழமுதிர்ச்சோலை மலையின்மீது
பெருமையுடன் அமர்ந்திருக்கும்
மனமயில் முருகோனே!
***********

****** அருஞ்சொற்பொருள் ******

அகரம் = 'அ' எனும் முதல் எழுத்து
அதிபன் = பெருந்தலைவன்
அயன் = பிரமன்
அரி = திருமால்
அரன் = சிவன்
இகரம் = சமீபத்தில் இருப்பவர்
இருநிலம் = பெரிய நிலம்
மகபதி = ஆயிரம் யாகம் செய்தவன்
வலாரி = வலன் எனு அசுரனைக் கொன்ற இந்திரன்
திரு = செல்வம்
***********

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!