Pages

Thursday, December 22, 2011

கார்த்திகேய காங்கேய கௌரி தனய



Unnikrishnan sings a melody in praise of Lord Karthikeya
உன்னிக்ருஷ்ணன் பாடுகிறார் ராகம் தோடி 
கார்த்திகேய காங்கேய கௌரி தனய
Raag தோடி
பாடலை இயற்றியவர் தமிழ் தியாகராஜர் எனப் போற்றப்படும்
பாபநாசம் சிவன்.  

Tuesday, December 13, 2011

Saturday, December 3, 2011

saravana bhava



Mrs.Lalitha Mittal sings SARAVANA BHAVA .
YOU MAY LISTEN TO THE SONG HERE ALSO

Sunday, November 20, 2011

Wednesday, November 16, 2011

வேல் மகிமை




வேல் மகிமை
வேல் மகிமை

மந்திரமாவது வேலே,மனச்

சாந்தியளிப்பதும் வேலே!

சுந்தரமாவது வேலே,சுக

வாழ்வு கொடுப்பதும் வேலே!

தந்திரமாவது வேலே,தன

பாக்கியம் தருவதும் வேலே!

செந்தூரிலே கோயில்கொண்ட கந்தன்

ஏந்திநிற்கும்சக்திவேலே!


ஆதரவாவது வேலே,அல்லல்

அகற்றியருள்வதும் வேலே!

சோதனையாவையுந்தாண்டி நம்மைச்

சாதிக்கச்செய்வதும் வேலே!

பேதங்கள் யாவையும்போக்கி நெஞ்சில்

நேயம் நிறைப்பதும் வேலே!

வேதங்கள் ஓதிடும் நாதன் விழி

ஜோதி விசாகனின் வேலே!


புத்தி திருத்திடும் வேலே,பொய்மை

போக்கும் புனிதனின் வேலே!

சக்தி பெருக்கிடும் வேலே,சித்த

சுத்தமளித்திடும் வேலே!

பக்தியைத்தூண்டி மனத்தை மிகப்

பரவசமாக்கிடும் வேலே!

பித்தன் நெற்றிவிழிப்பொறியாய் உதித்த

முத்துக்குமரன் கைவேலே!


இட்டமாய் நாடிவந்தோரின் கட்டம்

யாவும் களைந்திடும் வேலே!

சட்டித்திதிக்கான தெய்வம் கந்தன்

பொற்கரம் தாங்கிடும் வேலே!

துட்டரைவென்று துறத்தித் தூயோர்

துயரந்துடைத்திடும் வேலே!

பட்டரின் சொல்லை மெய்ப்பித்த

அபிராமியளித்த அருள் வேலே !

திருமதி லலிதா மிட்டல் அவர்கள் கந்த சஷ்டி திருவிழா வை முன்னிட்டு வேலின் பெருமைதனை பாடும் பாடல் இது.

வேலைப் பாடுவதைத் தவிர இந்த வேலையில்லாத கிழவனுக்கு வேறன்ன வேலை ?

வேலைப் பற்றி பாடுடா என்றான் வேலன்.
இதுவே என் வேலை தானே !!

Sunday, November 13, 2011

Saravanabhava

Saravanabhava

saravanabhava shanmugha
thiruvarul puriya vaa...

kundru thorum aazhum thirukumarane
kuraikal theertharulum.

Ranjani Gayathri Sing

Wednesday, November 9, 2011

Pazhani Nindra

Pazhani Nindra

Please click here to listen to a great song of PERIASAMY DHOORAN.
ON LORD MURUGAN

SINGER M.L.VASANTHA KUMARI.

Wednesday, November 2, 2011

THIRUPUGAZH



"அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்" - 32 "அகரமுமாகி"


இந்தத் திருப்புகழ் பலரும் அறிந்த ஒரு புகழ்!
இசைநிகழ்ச்சிகளில் அடிக்கடி பாடப்படும் பாடல்.
மதுரை சோமு மிக அருமையாகப் பாடுவார் இதை!
இன்றையப் பதிவில் இந்த எளிய, பொருள் நிறைந்த பாடலின் புகழ் பார்க்கலாம்! முருகனருள் முன்னிற்கும்!

****** பாடல் ******

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்

இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே
இருநில மீதி லெளியனும் வாழ எனதுமு னோடி வரவேணும்

மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே
வனமுறை வேட னருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே

செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே
திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே.

****** பொருள் ******
[பின்பார்த்து முன் பார்க்காமல் அப்படியே பார்க்கலாம்!!]

அகரமு மாகி யதிபனு மாகி யதிகமு மாகி அகமாகி
[அகரமும் ஆகி அதிபனும் ஆகி அதிகமும் ஆகி அகம் ஆகி]

'அகரமும் ஆகி'

எழுத்துகளின் தொடக்கம் அகரம்
உயிர்களின் தொடக்கம் இறைவன்

பிறவெழுத்துகளின் இயக்கமும் இதனால்
உயிரும் உலகும் இறையின்றி இயங்கா

அனைத்தெழுத்திலும் உன்னி நின்றிடும் அகரம்
அனைத்துயிரிலும் மறைந்திருப்பவன் இறைவன்

அகரம் சொல்லிட அதிகச் சிரமமில்லை
இறைவன் இயக்கமும் தானாய் நிகழும்

அ,உ,ம, எனும் மூவெழுத்து இதனுள்
முத்தொழிலும் இறைவன் கையில்

அருளெழுத்தாம் 'வ'கரமும் அகரத்துள்
அருளைத் தருபவன் எம்முடை இறைவன்

தொலைவையும் சுட்டும் 'அ'வெனும் எழுத்து
எட்டிநிற்பினும் அருள்வான் இறைவன்

இத்துணை பெருமை கூடிய அகரமும் ஆகி,

'அதிபனும் ஆகி'

'எந்தக் கடவுளும் என் தோள் போழ்
கந்தக் கடவுளை மிஞ்சாதே'எனும்
பாம்பன் சுவாமியின் வாக்கிற்கொப்ப
தனிபெருந் தலைவனாய்த் திகழ்பவனாகி,

'அதிகமும் ஆகி'

தெய்வங்கள் பலவுண்டு இத்திருநாட்டினிலே
அனைத்துக்கும் அதிகமாய் நிற்பவன் முருகன்
'சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை
சுப்ரமண்யர்க்கு மிஞ்சிய தெய்வமுமில்லை' எனும்
பழமொழிக்கேற்ப அதிகமானவானுமாகி,

'அகம் ஆகி'

முத்தி பெறும் அனைவருமே அகத்துள் செல்வர்
அகத்தில் உறைபவன் அழகிய முருகன்
வீடு பேற்றினை நல்கிடும் நல்லருட் தெய்வமுமாகி,

'அயனென வாகி அரியென வாகி அரனென வாகி அவர்மேலாய்'

படைப்பினைச் செய்திடும் பிரமனுமாகி
காத்தலை நிகழ்த்திடும் மாலுமாகி
அழித்திடச் செய்யும் உருத்திரனுமாகி
அவர்க்கும் மேலாய் அற்புதம் காட்டும்
அழகிய முருகனுமாகி,

'இகரமு மாகி யெவைகளு மாகி யினிமையு மாகி வருவோனே'
[இகரமும் ஆகி எவைகளும் ஆகி இனிமையும் ஆகி வருவோனே]

தொலைபொருள் காட்டும் அகரமும் ஆனவன்
அருகினில் இருக்கும் இகரமும் ஆகி
அண்டிடும் அடியர்க்கு நல்லருள் புரிவான்

காற்றாகிக் கொடியாகி கானகமுமாகி
ஊற்றாகி உயிராகி உள்ளவை யாவுமாய் ஆகி
தோற்றுவிக்கும் அத்தனையும் தானேயாகி
ஆற்றல்நிறைப் பரம்பொருளாய் யாவுமாகினான்

கனியிலும் இனியன் கரும்பினும் இனியன்
பனிமலர்குழல் பாவையரினும் இனியன்
தனிமுடி கவித்தாளும் அரசினும் இனியன்
உயிரினும் இனியன் உணர்வினும் இனியன்
இனிக்கும் இனிமையாய் வருபவன் முருகன்


'இருநில மீதி லெளியனும் வாழ எனதுமுனோடி வரவேணும்'
[இருநிலம் மீதில் எளியனும் வாழ எனதுமுன் ஓடி வரவேணும்]

பூவுலகில் வாழ்கின்ற அனைத்துயிரும் நலம்வாழ
எனதுமுன்னே நீ விரைந்தோடி வரவேணும்


'மகபதி யாகி மருவும்வ லாரி மகிழ்களி கூரும் வடிவோனே'
[மகபதி ஆகி மருவும் வலாரி மகிழ்களிகூரும் வடிவோனே]

அசுவமேத யாகம்பல செய்ததனால்
யாகத்தின் அதிபதியெனப் பெயர் பெற்று
வலன் எனும் அரக்கனை அழித்தமையால்
வலாரியெனப் புகழ்பெற்ற இந்திரனும்
தம்மகளாம் தெய்வநாயகி மணாளனின்
பேரழகைக் கண்டு மனதிலங்கு வியந்து
மகிழ்வுடனே போற்றும் வடிவழகு பொருந்தியவனே

'வனமுறை வேடனருளிய பூஜை மகிழ்கதிர் காம முடையோனே'

வனத்தில் வாழ்ந்தான் வேடனொருவன்
தனக்குள் ஆசையை அவனும் வளர்த்தான்
மனமயில் முருகனின் பூஜனை செய்திடும்
நினைவினில் அவனும் கோயிலை அடைந்தான்

கையினில் கனிகளும் கொம்புத்தேனும்
கொய்திட்ட புதுமலர்க் கொத்தும் கொண்டு
பையவே நடந்தான் கதிர்காமக் குமரனின்
மெய்வழிச் சாலையின் கோவிலை நோக்கி

செய்திட்ட பூஜையில் முருகன் மகிழ்ந்தான்
வந்திட்ட வேடனின் பூஜனை ஏற்றான்
மந்திரமில்லப் பூஜையிலும் மகிழ்வான்
மனமதிலொன்றி மகிழ்வுடன் செய்தால்

'செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு மயிலோனே'

பொருந்திடும் போரில் வருந்திடும் உயிர்கள்
எழுந்திடும் விழுந்திடும் அவுணரின் உடல்கள்
வேலனின் மயிலின் போரதில் மாயும்
செககணசேகு தகுதிமிதோமி எனவெழும்
மயிலின் மீதினில் அமர்ந்து அடிடும் முருகோனே


'திருமலி வான பழமுதிர் சோலை மலைமிசை மேவு பெருமாளே'

செல்வம் மலிந்து கிடக்கும்
பழமுதிர்ச்சோலை மலையின்மீது
பெருமையுடன் அமர்ந்திருக்கும்
மனமயில் முருகோனே!
***********

****** அருஞ்சொற்பொருள் ******

அகரம் = 'அ' எனும் முதல் எழுத்து
அதிபன் = பெருந்தலைவன்
அயன் = பிரமன்
அரி = திருமால்
அரன் = சிவன்
இகரம் = சமீபத்தில் இருப்பவர்
இருநிலம் = பெரிய நிலம்
மகபதி = ஆயிரம் யாகம் செய்தவன்
வலாரி = வலன் எனு அசுரனைக் கொன்ற இந்திரன்
திரு = செல்வம்
***********

அருணகிரிநாதர் புகழ் வாழ்க!
வேலும் மயிலும் துணை!
முருகனருள் முன்னிற்கும்!

Sunday, October 30, 2011

அப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா....கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்.



IT WAS MY FORTUNE THAT I GOT THIS BOOK KARTHIKEYAN PAAMALAI PUBLISHED BY
MUMBAI NAGARATHAR PANGUNI UTHIRATH THIRUVIZHA KUZHU, IN 1999 ON THE EVE OF
KANDHAR SHASTI.

WHAT A BEAUTIFUL DEVOTIONAL SONG BY THE GREATEST POET OF TAMIL NADU, KANNADASAN ON LORD MURUGAN !!


மலையினில் அரசமைத்த மன்னன்

அப்பனுக்குப் பாடம்சொன்ன சுப்பைய்யா ..வெறும்
ஆண்டியாகிப் பழனிவந்த வேலய்யா...
கற்பனையைத் தாண்டி நிற்கும் கந்தய்யா .. உனைக்
காண்பதற்கு நடந்துவந்தோம் நாமய்யா.

மலையினிலெ அரசமைத்த ம்ன்னனே எங்கள்
மடியினிலே குழந்தையான கந்தனே
தலைஇருக்கும் வரையிலுன்னை வணங்குவோம்
சன்னிதியில் பாடிபாடி மயங்குவோம்.

காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்தனம் அங்கு
கந்தனையே எண்ணி வாழ்ந்தனம்
பூவிரித்த பாண்டினாட்டில் வாழ்ந்தனம் உன்
பொன்னடியைக் கண்டுகண்டு மகிழ்ந்தனம்.

ஏறுகிறோம் இறங்குகிறோம் வாழ்வினிலே மயில்
ஏறிவரும் நீயறிவாய் நேரிலே
மாறிவரும் நாகரீக உலகிலே நாங்கள்
மாறவில்லை தெய்வபக்தி நிலையிலே

தண்டபாணி கோவிலின்றி ஊருண்டோ ? உன்னைத்
தண்டனிட்டு வணங்கிடாத பேருண்டோ ?
கொண்டுவிக்கப் போன எங்கள் கொள்கையே உனைக்
கொண்டு வைக்கப் போன கொள்கை யல்லவா !!

செந்திலாளும் பழனியாண்டி முருகவேள் எங்கள்
செட்டி மக்கள் தருமங்காக்க வருகவே
அந்தமிலா அழகுத் தெய்வம் கந்தவேள் உன்
அன்புமக்கள் வாழ்வுகாக்க வருகவே.

ஆண்டுதோறும் ஆண்டுதோறும் வருகிறோம் நீ
ஆண்டு வரும் பழனி நோக்கி வருகிறோம்
வேண்டி வரும் நலங்களெலாம் அருளுவாய் உன்
வீட்டு மக்கள் போல எம்மை ஆளுவாய்.

கவியரசு கண்ணதாசன் எழுதிய பாடல்.

இங்கே இருக்கிறது 
கவிஞர் மருதகாசி எழுதிய பாடல் 
கந்தன் புகழ் பாடும் பாடல்.. என்
சிந்தையை கவர்ந்த பாடல் என்
முந்தை வினை களைய ஒரு வழி கண்டேன்.






Soorasamharam,Swamimalai, Tamil Nadu.MPG




A View on Swamimalai Temple
Courtesy: dinamalar.

Saturday, October 29, 2011

Muruga muruga -Bombay jayashree



muruga muruga endraal urugaatho unthan ullam

varuvaay varuvaay endraal ....


Bombay Jayashree pleads with Lord MURUGA.

Sunday, October 23, 2011

Poonguyil.. A song by Kalki Krishnamoorthy.



D.K.pattammal sings in Raag kapi.

பூங்குயில் கூவும் பூஞ்சோலையில் ஓர் நாள்
மாமயில் மீது மாயமாய் வந்தான்

பொன்முகம் அதனில் புன்னகை பொங‌
இன்னமுதே என்ன இன்மொழி பகன்றொரு
மின்னலைப் போலே மறைந்தான். ... பூங்குயில் கூவும்

பனிமலர் அதனில் புதுமணம் கண்டேன்
வானில் கடலில் வண்ணங்கள் கண்டென்.
தேனிசை வினையில் தீஞ்சுவை கண்டேன்.
தனிமையில் இனிமை கண்டேன். ... பூங்குயில் கூவும்

வீரவேல் முருகன் மீண்டும் வருவான்.
வள்ளி மணாளன் என்னை மறவான்.
பேரருளாளன் எனக்கருள்வானெனும்
பெருமிதத்தில் மெய் மறந்தேன். ,,, பூங்குயில் கூவும்

Tuesday, October 18, 2011

முருகன் துதி



Mrs.Lalitha mittal has composed this song on Lord Muruga. This is in the pattern of KOLARU PATHIGAM. PLEASE CLICK HERE TO MOVE TO HER BLOG FOR READING THE TEXT OF THIS GREAT SONG.

Tuesday, October 11, 2011

kArtikEya kamalEkshaNa



Song: kArtikEya kamalekshaNa shivasutA ...
RAgam: valachi
TALam: Adi
Composer: Dr. Srivatsa
Concert: MArgazhi MahOtsavam 2007

Courtesy: carnaticopia/youtube

Monday, October 10, 2011

ஆறுபடை வீட்டுக் காவடிச் சிந்து!


Courtesy: K R S , MY WEB FRIEND WHO COMPOSES LYRICS ALMOST ON 24 X 7 BASIS.

ஆறுபடை வீட்டுக் காவடிச் சிந்து!

முருகன் அருளினை ஆக்கி - வலைப்
பூவினில் காவடி தூக்கி - நல்ல
அடியார் மனம் மகிழ்வா கிட, ஆசைத் தமிழ்ப் பதிவா கிட
வாராய் அருள் தாராய்!

மன்றத்தில் மாலையைச் சூடி - பரங்
குன்றத்தில் பாவையைக் கூடி - என்றன்
மனமே அதில் மணமே புரி, வனவே டவன் வருவான் அவன்
மயிலே பூங் குயிலே!

செந்திலில் பொங்கிடும் அலைகள் - திருச்
செந்தூர் முருகனின் கலைகள் - கந்த
வேலா னது சூரா திபன், மேலா னதைக் கூறாக் கிய
வீரா அதி தீரா!

பழனி மலைச் சிவ பாலன் - தமிழ்க்
கழனி உழும் வய லாளன் - எங்கள்
சீவனைத் திரு ஆவினன் குடி, மேவிடு மலை மாமகள் மகன்
ஆண்டி அவன் தான்டி!

சாமி மலை எனும் வீடு - பொன்னி
தாவி வரும் வயற் காடு - அங்கே
தப்பா தொரு மறையின் பொருள், அப்பா விடம் செவி ஓதிய
வேதன் சாமீ நாதன்!

வில்லிய மான் மகள் வள்ளி - அவள்
மெல்லிய தேன் இதழ்க் கிள்ளி - மங்கை
கரம் பற்றிடக் கலி கொட்டிட, மணம் உற்றிடச் சினம் விட்டிட
பணிகை திருத் தணிகை!

மாமனின் சோலையின் மீதில் - மட
மங்கையர் காதலை ஓதில் - நாவல்
படுமா மரம் அதன்மீ தினில், சுடுமோ பழம் விடுமோ என
மாலை உதிர் சோலை!

ஆறு படை களில் வீடு - அங்கு
ஆறு முகங் களில் கூடு - அந்தச்
சேவடி மயில் சேவல் கொடி, சேந்தன் தரும் சேல் காவடி
ஆடு சிந்து பாடு!
காவடி யாடு சிந்து பாடு! காவடி யாடு சிந்து பாடு!

வெற்றிவேல் முருகனுக்கு அரகரோகரா!
வீரவேல் முருகனுக்கு அரகரோகரா!

Sunday, September 18, 2011

திருச்செந்தூர் முருகன் திருப்புகழ்




திருச்செந்தூர் முருகன் 
திருப்புகழ் 
பாடுவது நித்ய ஸ்ரீ மகாதேவன்  

Tuesday, August 23, 2011

வரமொன்று தருவாய்.



Raag shanmugha priya. A master piece by Maharajapuram Santhanam.

வரமொன்று தருவாய். 

Tuesday, August 16, 2011

நீல மயில் மீது ஞாலம் வலம் வந்த நீ எனக்கு அருள் தர வேண்டும்.


 நீல மயில் மீது ஞாலம்  வலம் வந்த நீ எனக்கு அருள் தர வேண்டும்.
 சீர்காழி கோவிந்த ராஜன் பாடுகிறார். 
 இதை கேட்பதற்கே நாம் கொடுத்து வைத்து இருக்கவேண்டும். 
 இசையும் பக்தியும் கலந்த ஓர் இன்னிசை. 

Monday, August 15, 2011

முருகா முருகா என்றால் உருகாதோ



KINDLY CLICK THE TITLE OF THE POSTING TO VIEW THE VIRUTHAM BY MY WEB FRIEND SRI JEEVA

SUBSEQUENT SONG MOST POPULAR SONG BY PERIASAMY THOORAN

THIS SONG IS SUNG BY SUBBU THATHA IN RAAG SHANMUGHA PRIYA.

EXCELLENT RENDERING IN RAAG SAVERI BY ARUNA SAIRAM. LISTEN HERE.

Sunday, August 14, 2011

Aruna Sairam - 10 - SAvEri - MurugA MurugA EndrAl



My friend has composed an excellent piece of prayer to Lord Muruga.
Kindly click the title of this posting to move on to JEEVA BLOG.

Tuesday, August 2, 2011

விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள்


     Get this widget |     Track details  |        eSnips Social DNA   


விழிக்குத்துணை திருமென்மலர்ப் பாதங்கள் மெய்மைகுன்றா
மொழிக்குத்துணை “முருகா” வெனும் நாமங்கள் முன்புசெய்த
பழிக்குத்துணையவன் பன்னிருதோளும் பயந்ததனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே!
 கந்தர் அலங்காரம்.
 எல்லாப் பாடல்களையும் படித்து இன்புறுங்கள். மேலே கிளிக்குங்கள். 

ராகம் : சிந்து பைரவி. பாடுபவர்: காயத்ரி வேங்கட ராமன் அவர்கள். 
இதே கந்தர் அலங்கார பாடல் இன்னொரு ராகத்தில் எனது நண்பர் அவர்கள் வலையில் மிகவும் அழகாக விளக்கப்பட்டுள்ளது.
 நன்றி: ஜீவா ஜீவி அவர்கள்.

     Get this widget |     Track details  |         eSnips Social DNA    

Friday, July 29, 2011

சேவற் கொடியோனின் பதம் சேருவோம்!


சேவல் கொடியோன் அவன் சுந்தரன் சுவாமிநாதன் 
வேலைக் கையில் ஏந்தி யவன்  வெற்றி வேலன் எனப்பெயர் கொண்டான். 
முருகன் அவன் முறுவலிலே மனம் இனிக்கும் .
மால் முருகன் அவன் மலை உச்சி மேலே சென்று 
பால் வடியும் முகத்துடனே பழனி மலை ஆண்டவனாய் ஆட்சி செய்தான். 


நெஞ்சு உருக்கப் பாடிடும் கவிநயாவின் பாடல் ஒன்று இங்கு பாகேஸ்வரி ராகத்தில் தாத்தாவால் பாடல்பெறுகிறது. பாடலை பார்க்க தலைப்பைக்க்ளிக்கவும்.

Friday, July 22, 2011

வெற்றிவடி வேலவனை வேண்டித் தொழுதோம்



Devotees en route to Palani hills sing a song on Lord Muruga.

Please click at the title to move on to the author of the song Sri Sivakumaran
or
click here to see the text of the song.

Sunday, July 3, 2011

Alagan Muruganidam Aasai Vaithen

அழகன் முருகனிடம் ஆசை வைத்தேன் !!


என் எனில், அந்த
அழகெல்லாம் முருகனே ..... !!!

Saturday, June 18, 2011

அழகுமயில் ஏறி


அழகுமயில் ஏறிகுகன் ஆடி வந்தான் -- நல்ல
பழகுதமிழ் பாடலிலே மயங்கி நின்றான்
பண்மலரால் பதம்பணிய மகிழ்ந்து நின்றான் -- அவன்
கண்மலர்கள் தாம்செருக கனிந்து நின்றான்!

பழத்திற்கென கோபங்கொண்டு பழனியானவன் - அவன்
பழுத்தவன்போல் பாடஞ்சொல்லி சுவாமியானவன்
விருத்தனைப்போல் நடித்துவள்ளி கணவனானவன் -- அவன்
திருத்தணியில் மணக்கோலம் கொண்டுஅருள்பவன்!

அன்னைதந்த வேலைத்தாங்கி வேலனானவன் -- அவன்
அசுரர்களை அழித்துஅரிய வீரனானவன்
பரிசெனவே தேவயானை தன்னை அடைந்தவன் -- அவன்
கரிசனமாய் அடியவரைக் காத்து மகிழ்பவன்!


--கவிநயா
http://muruganarul.blogspot.com

Friday, June 17, 2011

வேல் வந்து வினை தீர்க்க


இந்த அழகான அற்புத பாடலை இயற்றிய சுப்பு வாத்தியார் வலைக்குச் செல்ல இந்த பதிவின் தலைப்பைக் கிளிக்குங்கள்.

Monday, May 30, 2011

Pazhanimalai Meedine

Friday, May 20, 2011

ஓராறு முகனே .....



neelakanta deekshithar iyatriya muruga gaanam.
முருக கானம்.

நீல கண்ட தீட்சிதர் இயற்றியது. 
திருமதி ரஞ்சனி காயத்ரி பாடுகிறார்கள். 
ராகம்: ரீதி கெள்ள 


ஓராறு முகனே .....

Wednesday, May 4, 2011

Om Saravana bhava Om !



This KRITHIGAI GEETHAM is composed by Mrs.Lalitha Mittal.
Please click the title of the posting to log on to the author of the song.

subbu thatha sings this geetham in Raag Bhoopalam

Monday, April 25, 2011

முருகன் அருள் மாலை.

முருகன் அருள் மாலை. 
தெய்வப்புலமையுடன் கவிதை உலகில் மயில் போல நடனமாடும் எனது வலை நண்பர் திரு சிவகுமார் அவர்களது கவிதைகளைப் படிக்கையிலே கண்களிலே நீர் பெருகும். இதயத்திலே அன்பு சுரக்கும். அருள் மழை பெய்யும். 
தன்னைப் பற்றிய அவரது அறிமுகம் இதோ:
பார்த்தவற்றை கவிதைக்குள் பதுக்கிவைக்கும் பகல்திருடன் வார்த்தைகளால் தவமியற்றி வரங்கேட்கும் கவிச்சித்தன்
அவரது வலையில் காணும் ஒரு கவிதையை, இந்தக் கிழவன் பல ராகங்களில் பாட கேழுங்கள். .


பூமாலை சூட்டியும் பொன்னாரம் சாத்தியும் பூஜிக்கும் பக்தரிடையே
பூப்போன்ற வார்த்தையால் பொன்போன்ற கவிதையால் புகழாரம் சாத்துகின்றேன்
பாமாலை சூட்டியுன் பாதார விந்தங்கள் பணிவோடு போற்றுகின்றேன்.
பார்வதி பரமனின் பாலனே வேலனே பாராளும் பாலமுருகா

 அடுத்து படிக்க அவரது வலைக்குச் செல்லவும்.
This is the first of the sixteen stanzas in the
Lyric Composed by Thiru சிவகுமாரன்
அவரது வலைக்குச் செல்ல இங்கே சொடுக்குங்கள். அல்லது பின் வரும் தொடர்பை கட் அண்ட் பேஸ்ட் செய்யுங்கள். 
http://arutkavi.blogspot.com
subbu thatha sings as a Ragha malika

Tuesday, April 12, 2011

Lord Muruga at Malaysia. A song by Bharathi kavalar K.Ramamurthy

COURTESY: TAMIL WEEKLY MAGAZINE KALAIMAGAL APRIL 2011 ISSUE
SONG COMPOSED BY BHARATHI KAVALAR THIRU K.RAMAMURTHY.
தமிழ் மாத இதழ் கலைமகள் ஏப்ரில் 2011 
புலவர் பாரதி காவலர் திரு கே. ராம மூர்த்தி

Saturday, March 19, 2011

Kanda naal muthalai!!!



இன்று பங்குனி உத்திரம்.  பழனியில் தேர் உற்சவம்.

கந்தன் மேல் உண்டான காதலை கேட்டு களியுங்கள். 

Wednesday, March 9, 2011

குன்றெல்லாம் குடியாக உருவானவன்



Thiru Sivakumaran has penned a beautiful prayer song
subbu thatha sings the same in Raag kanada.

For text of the song, please click the title of this posting to move on to the author of the song.

Friday, March 4, 2011

எத்தனை பாடல் அய்யா எங்கள் முத்துகுமரனுக்கு !



எத்தனை பாடல் அய்யா எங்கள் முத்துகுமரனுக்கு !
SEEKALI கோவிந்தராஜன் மனமுருகி பாடும் பாடல்கள் 
ஒவ்வொன்றாக பொறுமையாக கேளுங்கள்.  


Friday, February 25, 2011

OM MURUGA



Madam Kavinaya pens a bhajan in her blog:
http://bhajanaipaadalkal.blogspot.com

ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்
ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம்

வேல்முருகா வினைதீர்க்க வாமுருகா ஓம்
மால்மருகா மருள்நீக்க வாமுருகா ஓம் (1)

ஆறெழுத்து மந்திரத்தை ஓம்முருகா ஓம்
அன்புடனே ஓதுகின்றோம் ஓம்முருகா ஓம் (2)

ஏறெடுத்தும் பாராமல் ஓம்முருகா ஓம்
நீயிருப்ப தழகாமோ ஓம்முருகா ஓம் (3)

தேர்விடுத்த சாரதியின் ஓம்முருகா ஓம்
பேரெடுத்த மருமகனே ஓம்முருகா ஓம் (4)

வேல்கொடுத்த அம்பிகையின் ஓம்முருகா ஓம்
வீரமைந்த னானவனே ஓம்முருகா ஓம் (5)

கால்பிடித்த பக்தர்களை ஓம்முருகா ஓம்
காப்பதுன்றன் கடமையன்றோ ஓம்முருகா ஓம் (6)

ஆறுமுக மானவனே ஓம்முருகா ஓம்
அழகுவடி வேலவனே ஓம்முருகா ஓம் (7)

பச்சைமயில் வாகனனே ஓம்முருகா ஓம்
பழனிமலை பாலகனே ஓம்முருகா ஓம் (8)

பொய்கையிலே தாமரையில் ஓம்முருகா ஓம்
பொன்போல தவழ்ந்தவனே ஓம்முருகா ஓம் (9)

இதயமெனும் தாமரையில் ஓம்முருகா ஓம்
ஏந்திக்கொள்ள ஏங்குகிறோம் ஓம்முருகா ஓம் (10)

ஏறுமயில் மீதினிலே ஓம்முருகா ஓம்
ஏறிஇப்போ வந்திடணும் ஓம்முருகா ஓம் (11)

ஏழையெமக் கிரங்கிடுவாய் ஓம்முருகா ஓம்
இக்கணமே வந்திடுவாய் ஓம்முருகா ஓம் (12)


--கவிநயா

Tuesday, February 15, 2011

அருணகிரி, திருப்புகழ்






அவனி தனிலே பிறந்து,
மதலை எனவே தவழ்ந்து
அழகு பெறவே நடந்து ......
இளையோனாய்
அரு மழலையே மிகுந்து,
குதலை மொழியே புகன்று
அதி விதமதாய் வளர்ந்து ...... பதினாறாய்

சிவகலைகள் ஆகமங்கள், 
 கவு மறை ஓதும் அன்பர் 
திருவடிகளே நினைந்து ......
துதியாமல்
தெரிவையர்கள் ஆசை மிஞ்சி,
வெகு கவலையால் உழன்று
திரியும் அடியேனை உன்றன் ...... அடிசேராய்


மவுன உபதேச சம்பு, 
மதி அறுகு வேணி தும்பை
மணி முடியின் மீதணிந்த ...... மகதேவர் 
மன மகிழவே அணைந்து, 
ஒருபுறம் அதாக வந்த 
மலைமகள் குமார துங்க ...... வடிவேலா




பவனி வரவே உகந்து,
மயிலின் மிசையே திகழ்ந்து 
படி அதிரவே நடந்த ...... கழல்வீரா 
பரமபதம் ஆய செந்தில், 
முருகன் எனவே உகந்து
பழநிமலை மேல் அமர்ந்த ...... பெருமாளே!


அருணகிரி, திருப்புகழ்

Sunday, February 13, 2011

Swamimalai Murugan Temple And A song on Muruga at Uthara Swamimalai, Delhi

முதலில் சுவாமிமலை பற்றிய வர்ணனை .  தினமலர் பத்திரிகையில் வந்தது. நன்றி: முருக பக்தன் அவர்கள்.







உத்தர சுவாமிமலை என்றும் மலை மந்திர் எனவும் போற்றப்படும் தில்லி வாழ் மக்களின் அன்புத் தெய்வமான முருகனின் அருளை வேண்டி திருமதி லலிதா மிட்டல் அவர்கள் எழுதிய பாட்டு இது.  அவர்கள் வலைக்கு செல்ல இந்த பதிவின் தலைப்பைக்  கிளிக்கவும்.




மலைமந்திர் முருகதரிசனம் [தில்லி மலை மந்திர் இல் முருகனைத்
தரிசித்தபோது மனத்தில் சுறந்த பாட்டு ]
====================================================================

கமகமவென குகனின் திருநீறு மணக்குது !
குபுகுபுவென மனத்தில் பாட்டொன்று சுறக்குது!
' அரோஹரா'வென பக்தர்ப்பெருங்கூட்டம் கூவுது!
பரவசமாய் என்மனம் பாமலர் தூவுது!

தகதகவென குகனின் வெள்ளிவேல் ஒளிருது!
தரிசனஞ் செய்வோரின் உள்ளங்குளிருது!
சிலுசிலுவென மயில் குகனைச் சுத்திசுத்தியாடுது!
காணக்கண் கொள்ளா இக் காட்சிக்கு ஈடேது?
Posted by Lalitha Mittal

Thursday, February 3, 2011

பிரியா சகோதரிகள் திருப்புகழ் பாடுகிறார்கள்.



பிரியா சகோதரிகள் திருப்புகழ் பாடுகிறார்கள்.
ராகம் அமீர் கல்யாணி. ரூபக தாளம்.

Tuesday, February 1, 2011

மயில் வாஹன மன மோகனா ..



மயில் வாஹன மன மோகனா .. ராகம் மோகனம்.
பாப நாசம் சிவன் பாடல் . பிரியா சகோதரிகள் பாடுகிறார்கள்.